வேகத்தால் பளையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Admin
வேகத்தால் பளையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்..

கிளிநொச்சிப் பளைப் பகுதியில் இன்று(09) கோரவிபத்து நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த அதிசொகுசு பேருந்துடன் பல்சர் ரக மோட்டார்ச் சைக்கிள் மோதியமையாலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பளை நகரத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் புதுக்காட்டிற்கு இடைப்பட்ட பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். அதில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் அதிவேகத்தில் அதனை இயக்கியதாகவும், இதுவே விபத்திற்கு காரணமெனத் தெரியவருகிறது. 

இந்நிலையில் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடான் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு உடனடியாகப் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, விபத்துக்குள்ளான இரு இளைஞர்களும் இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்களாவார். சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளாகியதுடன் பேருந்தின் வலது பக்கமும் கடும் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு பளைப் போக்குவரத்துப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு