வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமையும் (07), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (08) காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை உடுவில் மேலதிக அரசாங்க அதிபர் அலுவலர் வீதி, அம்பலவாணர் வீதி, தொம்பை வீதி ஆகிய பகுதிகளிலும்,

நாளை மறுதினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். மண்கும்பான், மண்கும்பான் நீர்ப்பாசன சபை, அல்லைப்பிட்டி, வெண்புரவிநகர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு