பணத்தைக் கொடுத்து வளைத்ததாக விக்கி கூறவில்லை! - தமிழ் மக்கள் கூட்டணி

ஆசிரியர் - Admin
பணத்தைக் கொடுத்து வளைத்ததாக விக்கி கூறவில்லை! - தமிழ் மக்கள் கூட்டணி

பணத்தை வழங்கியே அரசாங்கம் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ அரசுக் கட்சியை பொறுத்தவரையிலேயே அவர்களுக்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் பார்த்தீர்களானால், தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கு வெகுவாகப் பணத்தைக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்ற முறையிலேயே, நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு பெருவாரியான பணம் கொடுத்திருக்கின்றார்கள்.

இதில் சில சில வீதிகளை திருத்துகின்றார்கள். வேறு ஏதேதோ வேலைகள் எல்லாம் செய்கின்றார்கள். ஆகவே, ஒரு விதத்திலே அவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் பக்கத்திற்கு இவர்களை இழுத்து விட்டார்கள் போன்று எங்களுக்கு தெரிகின்றது.

எங்களோடு சேர்ந்து ஒருமித்து பயணிப்பதாகத் தான் கூறியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இருக்கும் அந்த கடப்பாட்டையொட்டி அவர்கள் அவ்வாறானதொரு தீர்மானத்திலிருந்து விலகி சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இது எவ்வளவு காலம் அவ்வாறு இருக்கும் என்று என்னால் கூறமுடியாது. வருங்காலமும் எங்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது விட்டுவிடுமோ என்று எனக்கு தெரியவில்லை.

தற்போது இந்த ஐந்து கட்சிகளிலே ஓரிருவர் ஓரே விதமான கருத்தினை எடுத்தியம்பியிருக்கின்ற படியால் மற்றையை மூன்று கட்சிகளும் தங்களுடைய கருத்தை வெளியிடக்கூடும் என்ற விடயத்தை மட்டுமே தெரிவித்திருந்தார் என்பதை இங்கே தெளிவுபடுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு