சஜித்தின் தேர்தல் வாக்குறுதிகள் - கூட்டமைப்பு கட்சிகள் இன்று ஆலோசனை!

ஆசிரியர் - Admin
சஜித்தின் தேர்தல் வாக்குறுதிகள் - கூட்டமைப்பு கட்சிகள் இன்று ஆலோசனை!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளதால், அதனை ஆராய்ந்து, அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் கட்சிகள் கலந்துரையாடி தீர்மானிக்கும் என டெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் கலந்துரையாடலை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

5 தமிழ் கட்சிகள் ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்பதால், தாம் விரும்பும் வேட்பாளருக்கு தபால் வாக்குகளை வழங்குமாறு அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டவர்களின் ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட யோசனைகள் மற்றும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டதால், எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க முடியவில்லை எனவும் இதனால், பேச்சுவார்த்தை ஒத்திவைத்ததாகவும் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு