சிவாஜிலிங்கத்தை இடைநிறுத்துவது குறித்து ஆராய்வு !

ஆசிரியர் - Admin
சிவாஜிலிங்கத்தை இடைநிறுத்துவது குறித்து ஆராய்வு !

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அனுமதியின்றி போட்டியிடும் சிவாஜி லிங்கத்தை கட்சியிலிருந்து இடைநிறுத்துவது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்க உயர்மட்ட குழு ஆராய்ந்து வருகின்றது.

தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். 

இது தொடர்பாக எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்குமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகபோவதில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

இதுவரை அவர் கட்சியினால் அனுப்பட்ட விளக்க கடிதத்திற்கு பதில் அளிக்காததால் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவது தொடர்பாக  கட்சியின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் அவர் கட்சியிலிருந்து எதிர்வரும் 3 ஆம் திகதி இடைநிறுத்தப்படுவாரென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு