நாளை யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி, பிரதமா்..!

ஆசிரியர் - Editor I
நாளை யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி, பிரதமா்..!

“என்டபிறைஸஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியின் 3வது தேசிய நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்கா க ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா மற்றும், பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோா் நாளை காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகைதரவுள்ளனா். 

எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கு­பற்­று­கின்­றனர்.இந்த நிகழ்வின் ஆரம்பப் பணி­க­ளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­பட்­டது.

இதே­வேளை, யாழ். மாந­கர சபையின் புதிய மாந­கரக் கட்­ட­டத்­துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு