வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்ப பெண்ணை காணவில்லை..! தகவல் தொிந்தால் தொியப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்ப பெண்ணை காணவில்லை..! தகவல் தொிந்தால் தொியப்படுத்துங்கள்..

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற 39 வயதான குடும்ப பெண் ஒருவா் காணாமல்போயுள்ளதாக கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா். 

வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்ற இளம் தாயே காணமல்போயுள்ளாா்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கணவரின் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு செல்லுவதாக தெரிவித்து கடந்த 27ம் திகதி செவ்வாய்க்கிழமை 

காலை 8.00 மணியளவில் அவரது நண்பியுடன் மோட்டார் சைக்கிலில் வவுனியா பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

அன்றையதினம் மாலையாகியும் குறித்த பெண் யாழ்ப்பாணம் செல்லவில்லை அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது. 

அவரை தேடும் முயற்சியில் பெண்ணின் உறவினர்கள் மேற்கொண்டிருந்த போதிலும் அது பயணளிக்கவில்லை. 

அதன் பின்னர் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 

குறித்த பெண் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தினை சேர்ந்த பாவடையினை அணிந்திருந்தாவும் அவர் தொடர்பான தகவல்களை அறிந்தால் 

உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கிழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். 

தாயை தேடி அவரது இரு பிள்ளைகளும் தினசரி அழுவதாக பெண்ணின் உறவினர் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு077 - 8364865076 - 6662847077 - 9361797


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு