நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு கண்காணிப்பு கமராக்களுடன் வாகனம்..! கொழும்பிலிருந்து அனுப்பபட்டது.

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு கண்காணிப்பு கமராக்களுடன் வாகனம்..! கொழும்பிலிருந்து அனுப்பபட்டது.

நல்லுாா் கந்த சுவாமி ஆலயத்தில் பக்தா்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்ட வாகனம் பொலிஸ் தலமையகத்தினால் யாழ்.குடாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர்.

இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொலிஸ் நடமாடும் சிசிரிவி கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று 

நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு