முக்கிய நபா் ஒருவரை கொலை செய்ய சதி செய்தாரம், ஆயுதமும் இருந்ததாம்..! மருத்துவா் சிவரூபன் கைதுக்கு இதுவே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
முக்கிய நபா் ஒருவரை கொலை செய்ய சதி செய்தாரம், ஆயுதமும் இருந்ததாம்..! மருத்துவா் சிவரூபன் கைதுக்கு இதுவே காரணமாம்..

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தமை மற்றும் சட்டவிரோமான ஆயுதம் வைத்திருந்தமை, முக்கிய நபா் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை போன்றனவே வைத்தியா் சி.சிவரூபன் கைது செய்யப்பட காரணம் என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. 

நேற்­று­முன்­தி­னம் இரவு 8.30 மணி­ய­ள­வில் மருத்­துவ அதி­காரி பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­ன­ ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் இரவு 9.30 மணி­ய­வில் பளை பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­து­டன், இரவு 10.30 மணி­மு­தல் மருத்­து­வ­மனை 

பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­ன­ரால் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது. அதன்­பின்­னர் அங்­குள்ள மருத்­துவ அதி­காரி ஒரு­வ­ரி­டம், மருத்­துவ அதி­காரி சிவ­ரூ­ப­னின் பொறுப்­புக்­களை ஒப்­ப­டைக்­கச் செய்த பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­னர், 

மருத்­து­வ­ம­னை­யின் நட­வ­டிக்­கை­ளில் தம்­மால் எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­ பதை உறு­திப்­ப­டுத்­திக் கடி­தம் ஒன்­றைப் பெற்­றுக் கொண்டு மருத்­துவ அதி­காரி சிவ­ரூ­பனை அழைத்­துச் சென்­ற­னர் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. 

கைது செய்­யப்­பட்ட மருத்­துவ அதி­காரி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக யாழ்ப்­பா­ணம் பயங்­க­ர­ வாத விசா­ர­ணைப் பிரி­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும், விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரு­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது நாட்­டில் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் இந்­தக் கைது நடந்­ துள்­ளது. கடந்த ஏப்­ரல் மாதம் நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தலை அடுத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் அவ­ச­ர­கா­லச் சட்­டம் 

நடை­மு­றைக்­குக் கொண்டு வரப்­பட்­டது.அதன்­பின்­னர் நாட்­டில் பாது­காப்பு சீரான நிலை­மைக்கு வந்­துள்­ளது, இனி­மேல் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது என்று அவர் பல தட­வை­ கள் தெரி­வித்­தி­ருந்­த­போ­தும், ஒவ்­வொரு மாத­மும் 

அரச தலை­வ­ரால் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு