புளியங்குளம்- மருதோடை கிராமத்தில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த 11 பேருக்கு தா்ம அடி..! கூண்டோடு அள்ளிய பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
புளியங்குளம்- மருதோடை கிராமத்தில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த 11 பேருக்கு தா்ம அடி..! கூண்டோடு அள்ளிய பொலிஸாா்..

வவுனியா மாவட்டம் மருதோடை பகுதியில் இளம் பெண்ணை கடத்தி சென்ற 11 காவாலிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

இந்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளதுடன் 

மூன்று வருடங்களுக்கு முன்னர் காஞ்சனமோடை பிரதேசத்திற்கு வந்து மீள் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென வான் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் 

வந்த சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர். 17 வயதான யுவதியை வானில் ஏற்றி சந்தேக நபர்கள் கடத்திச் சென்ற போது, 

உடனடியாக செயற்பட்ட கிராமவாசிகள் வானை பின்தொடர்ந்து சென்று புளியங்குளம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்த 11 பேரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களையும் வாகனங்களை பிரதேசவாசிகள் தாக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். 

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது கடும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்தவர்களின் 

பிரதான சந்தேக நபர், யுவதியின் வீட்டை நிர்மாணித்த மேசன் பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்கள் வவுனியா மரதன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு