யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நடந்த தொடா் திருட்டு..! கையும் களவுமாக மாட்டிய திருடன் பொலிஸாாிடம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நடந்த தொடா் திருட்டு..! கையும் களவுமாக மாட்டிய திருடன் பொலிஸாாிடம்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மருத்துவ சேவையாளா்களின் தொலைபேசிகளை தொடா்ச்சியாக திருடிவந்த இளைஞன் இன்று கையும் களவுமாக மாட்டியுள்ளாா். 

வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் 

மருத்துவ சேவையாளர்கள் இருவரின் தொலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன. வெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின் தொலைபேசி கடந்த வியாழக்கிழமை திருட்டுப்போயிருந்தது. 

கடந்த சனிக்கிழமை 10ஆவது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் தொலைபேசி இவ்வாறு திருட்டுப் போயிருந்தது. இந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உஷார் அடைந்தனர். 

மருத்துவ சேவையாளர்கள் இருவரினது தொலைபேசிகளையும் திடிய அதே இளைஞன் இன்று 27ஆவது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின் அலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய வேளை 

பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு