வல்வெட்டித்துறை “எம் தேசத்து மண்”.. புகழாரம் சூட்டிய மாவை..! பிரபாகரன் பிறந்து வளா்ந்த மண் என பெருமிதம்.

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறை “எம் தேசத்து மண்”.. புகழாரம் சூட்டிய மாவை..! பிரபாகரன் பிறந்து வளா்ந்த மண் என பெருமிதம்.

பல சாதனைக்கு சொந்தமானவா்கள் பிறந்த மண்ணிலேயே பிரபாகரனும் பிறந்து மண்ணின் விடுதலைக்காக தன்னை அா்ப்ணித்தாா். அவ்வாறான பெருமைகளை கொண்ட வல்வெட்டித்துறை மண்ணை நாங்கள் எங்கள் தேசத்து மண் என புகழாரம் சூட்டுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். 

ஆழிக்குமுரன் ஆனந்தன் நீச்சல் தடாகத் திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது, உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,வரலாற்றுப் புகழ் பெற்ற தமிழனான ஆழிக் குமரனுக்கு ஒரு நினைவுச் சின்னமாக இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

எதிர்காலத்தில் எம் சமூதாயத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கக் கூடிய வகையில் இந்த நீச்சல் தடாகம் காணப்படுகிறது. அதனை இங்கு அமைத்ததற்காக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட ஏனையவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆழிக்குமரனது சாதனைகளுக்காகளுக்காக இங்கு அவருக்கு பாராட்டுவிழா நடந்த போது 

நானும் இங்கு வந்திருக்கின்றேன். தமிழர்களுக்கு இந்த நாட்டிலே சமனான முறையான சந்தர்ப்பங்கள் கிடைத்தால் இப்படிப் பல சாதனைகளை உலகுக்கும் நாட்டுக்கும் செய்து காட்டியிருப்பார்கள் என்பதை இந்த நினைவுச் சின்னம் ஒரு செய்தியை சொல்லி நிற்கின்றது. உலகத்தில் யாரும் செய்யாத சிறந்த சாதனை 

புகழ் பெற்ற தமிழ் மகன் ஆழிக்குமரன் செய்திருக்கின்றார். அவரது இந்த சாதனைனயை எங்கள் எதிர்கால சந்ததிகள் இதனூடாக விளங்கிக் கொள்வார்கள். போரால் பாதிக்கப்பட்டு இந்த நாட்டை ஆளுபவர்களாக இல்லாமல் இருக்கும் இளம் சமூதாயம் வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்பதற்கு இந்தச் சாதனைகள் அவர்களை 

ஊக்குவித்து நிற்குமென்று நம்புகிறேன். ஏனென்றால் வல்வெட்டித்துறை மண் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை வட்டுக்கோட்டையிலே தமிழர் சுதந்திரம் பற்றிய தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று இந்த மண்ணில் தான் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அப்படியாக தீர்மானம் எடுத்த மண்ணில் தான் சாதகைள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.பல புகழ்புத்த பெருமக்கள் இந்த வல்வெட்டித்துறை மண்ணில் தான் பிரபாகரன் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் விடிவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தேசத்து மண் என்று புகழாரம் சூட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

அதை நாங்கள் ஒருபொழுதும் மறந்திருக்க முடியாது. இனம் விடுதலை பெறும் வரைக்கும் அப்படியான சாதனை படைத்தவர்களை அர்ப்பணித்தவர்களை விடுதலை வீரர்களை நாங்கள் மறந்துவிட முடியாது எஎன்பதை சொல்வதற்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு