ஒன்றும் கிடைக்கவில்லை..! கிடைத்ததும் முழுமையில்லை.. சுமந்திரன் கவலை.

ஆசிரியர் - Editor I
ஒன்றும் கிடைக்கவில்லை..! கிடைத்ததும் முழுமையில்லை.. சுமந்திரன் கவலை.

ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு பல விடயங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவையும் பூரணமாக கிடைக்கவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் 

தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம். ஆனால், 

ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்பு விடயத்திலும் 

ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு