வாய்த்தா்க்கம் மோதலானது..! நாக்கை கடித்து துப்பிய காவாலி, நாக்கை தேடும் பொலிஸா்.. மேலும் 3 பேருக்கு கத்தி குத்து..

ஆசிரியர் - Editor I
வாய்த்தா்க்கம் மோதலானது..! நாக்கை கடித்து துப்பிய காவாலி, நாக்கை தேடும் பொலிஸா்.. மேலும் 3 பேருக்கு கத்தி குத்து..

இரத்தினபுாி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலில் முடிந்த நிலையில் ஒருவருடைய நாக்கை இன்னொருவா் கடித்து துப்பியுள்ளாா். 

மோதலின் போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மூவர் பொத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாக்கை கடித்து துண்டாக்கிய நபர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துண்டாகிய நாக்கு பகுதி தேடப்பட்ட போதிலும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாக்கை கடித்த நபர் அதனை விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தனது நாக்கை இழந்துள்ளார்.

குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு