SuperTopAds

கிளி­நொச்சி பகு­தி­யில் தாழி­றங்­கி­யுள்ள பாலம்!

ஆசிரியர் - Editor II
கிளி­நொச்சி பகு­தி­யில் தாழி­றங்­கி­யுள்ள பாலம்!

தரு­ம­பு­ரத்­தில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் சாலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பாலம் உடைந்த நிலை­யில் தாழி­றங்கிக் காணப்­ப­டு­கின்­றது.பாலம் இவ்­வாறு தாழி­றங்­கி­யுள்­ள­தால் வாக­னங்­கள் அச்­சத்­து­ட­னேயே பய­ணம் செய்­து­ வ­ரு­கின்­றன.

இது­தொ­டர்­பாக மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கண்­டா­வளை பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் பாலம் அமைந்­தி­ருக்­கின்­றது. இந்தப்­பா­ல­மா­னது மீள்­கு­டிய மர்வுக்குப் பின்­னர் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

புதி­தாகச் சீர­மைக்­கப்­பட்ட பாலம் இவ்­வாறு சேத­ம­டைந்­தி­ருப்­பது தொடர்­பில் பொது­மக்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர். சீர­மைப்பு வேலை­க­ளில் இருக்­கும் குறை­பா­டு­களே இதற்கு கார­ணம் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

நாளாந்­தம் அதி­க­ள­வான மக்­கள் தமது போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கு இந்தச் சாலை­யைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். எனி­னும் பாலத்­தில் வெடிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. இரு ஓரங்­க­ளும் தாழி­றங்­கிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன.

இந்­தச் சாலை தரு­ம­பு­ரத்­தில் இருந்து வட்­டக்­கச்சி, இரா­ம­நா­த­ப­ரம் செல்­லும் முதன்­மைப் பாதை­யா­க­வும் காணப்­ப­டு­கின்­றது. எனவே உரி­ய­வர்­கள் இதனை கவ­னத்­தில் எடுத்து பாலத்தைச் சீர­மைக்க நட­வ­டிக்­கை எடுக்­க ேவண்­டும் என மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

குறித்த சாலை­யா­னது பிர­தேச சபைக்­கு­ரி­யது என்­ப­த­னால் இது தொடர்­பாக கரைச்சிப் பிர­தே­ச­ சபைச் செய­லா­ளர் கம்­ச­நா­த­னி­டம் கேட்­ட­போது: அது 1000 பாலங்­கள் திட்டத்­தின் கீழ் சீர­மைப்­புச் செய்­யப்­பட்­டது என்­றும், அத­னைத் தமது பிரிவு மேற்­கொள்­ள ­வில்லை என்­றும் தெரி­வித்­தார்.இத­னைத் தொடர்ந்து வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யைத் தொடர்பு கொண்­ட­போ­தும் அது பயன­ளிக்­க­வில்லை.