ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

“எங்களைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் மக்கள் முடிவெடுத்த பின்பு தான் நாங்கள் அந்த முடிவுக்கு தள்ளப்பட்டோம். அதேபோல் தான் அடுத்த ஜனாதிபதி குறித்தும் மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். அதன் பின் நாம் சரியான முடிவை எடுக்க முடியும். 

இப்பொழுது தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள கட்சிகள் யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற பிரச்சினையில் உள்ளார்கள். அதன்பின் மக்கள் எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே எங்களது முடிவுகள் அமையும். பொறுத்திருந்து மக்களுடைய செயற்பாட்டுடன் ஒத்துப்போகின்ற ஒரு முடிவையே நாம் எடுப்போம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு