யாழ்.உடுவிலில் நடைபெற்ற விபச்சார விடுதி..! இளம் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளவும் முயற்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் நடைபெற்ற விபச்சார விடுதி..! இளம் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளவும் முயற்சி..

தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் நடத்துவதாக கூறிக்கொண்டு விபச்சார விடுதி நடத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

உடுவில் கிழக்கு பகுதியில் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் அலுவலகம் நடத்துவதாக வீடு ஒன்று காட்டப்பட்டு, 

அங்கு தென்னிலங்கையை சோ்ந்த இரு  இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த இரு இளம் பெண்கள் உள்ளடங்கலாக 4 போ் சோ்ந்து இன்று அப்பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்துள்ளனா். 

அந்த பெண் தப்பித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாா் ஒருவரை கைது செய்துள்ளனா். 

அவாிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து தொலைபேசி வலையமைப்பு நிலையத்தை பொலிஸாா் சோதனையிட்டபோது, 

அங்கிருந்தவா்கள் தப்பி சென்றிருக்கின்றனா். இதேவேளை உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக 

டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்தது. 

அங்கு நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர். 

அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுள்ளார். 

தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயம் என கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அந்த நபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் 

உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்று கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர். அதனால் இந்த விடயம் உடுவில் பிரதேச செயலரின் கவனத்துக்க 

தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர்  தெரிவித்தார்.

எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

சம்பவத்தை அடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், 

பொதுமக்கள் என பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குழுமியுள்ளனர். விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட 

அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று சுன்னாகம் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு