யாழ்ப்பாணம்- கொழும்பு புகைரத சேவை இன்றே முடங்கியது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- கொழும்பு புகைரத சேவை இன்றே முடங்கியது..!

இலங்கை புகைரத ஊழியா்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் சுமாா் 48 மணித்தியாம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்பு புகைரத சேவை இன்று மாலையே முடங்கியுள்ளது. 

இதனால் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு புறப்படும் இரவு நேர தபால் தொடருந்து சேவை இன்றிரவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் ரயில் நிலையத் தகவல்கள் தெரிவித்தன. 

எனினும் தொழிற்சங்கத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால் சேவை இடம்பெறும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவிலிருந்து 

ஆரம்பிக்கவிருந்த பணிப் புறக்கணிப்பு ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறாயினும் இன்று பிற்பகல் நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்ததையடுத்து 

அவர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேரம் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.அதன்படி ரயில் இயந்திர இயக்குனர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 

சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு