கல்முனைக்குள் நுழைந்த அத்துரலிய ரத்தின தேரா்..! கலக்கத்தில் பலா்..

ஆசிரியர் - Editor I
கல்முனைக்குள் நுழைந்த அத்துரலிய ரத்தின தேரா்..! கலக்கத்தில் பலா்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்துமாறுகோாி உணவு தவிா்ப்பு போராட்டம் நடாத்தப்பம் நலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலிய ரத்தின தேரா் சென்றுள்ளாா். 

இன்று குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை விசாரித்து அறிந்து கொண்டார்.மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, பெரு வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு 

அழைத்து வரப்பட்டார். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உடன் வந்தார். அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

மேலும் இவரது வருகையின் பின்னர் மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் 

கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரையும் பார்வையிட்டு 

ஆறுதல் கூறினார். பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு