சுமந்திரனின் பேச்சுக்கு சிாிப்பு வருகிறது..! சிாித்துக் கொண்டு கூறும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்..

ஆசிரியர் - Editor I
சுமந்திரனின் பேச்சுக்கு சிாிப்பு வருகிறது..! சிாித்துக் கொண்டு கூறும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்..

ஓடவும் மாட்டோம்.. ஒழியவும் மாட்டோம்.. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் கூறும் கருத்தை கேட்கும்போது சிாிப்பு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கூறியுள்ளனா். 

வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட கொட்டகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே 

காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தைச் சேர்ந்த தலைவர்கள் 

அந்தணர்கள் பங்குபற்றுகின்ற யாகம் ஒன்றினை 28ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளோம். குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல்போன உறவுகளுற்கு கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும் 

யாகம் மற்றும் பஜனையும் இடம்பெறவுள்ளது.28ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து 11.30 மணி வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்துகொள்ள வேண்டும் 

என்று கேட்டுக்கொள்கின்றோம். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்தி தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் 

என்று உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலேயும் ஒரு நகைச்சுவையான விடயமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்குவதுதான் 

தமிழர்களுக்கான உண்மையான தீர்வாக அமையும்” என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு