சஹரான் ஹாசீம் அப்படி செய்யவில்லை என்றாா்..! அப்துல் ராசிக் தொடா்பான கேள்விக்கு மௌனம் காத்தாா்..

ஆசிரியர் - Editor I
சஹரான் ஹாசீம் அப்படி செய்யவில்லை என்றாா்..! அப்துல் ராசிக் தொடா்பான கேள்விக்கு மௌனம் காத்தாா்..

பயங்கரவாதி சஹரான் ஹாசீம் 120 வீடுகளை எாித்திருந்தால் அதனை நாடே அறிந்திருக்கும். அவ்வாறான சம்பவம் நடக்கவில்லை. என கூறியுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாாி, 

அப்துல் ராசிக் தொடா்பாக பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், 

சஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாகவும் பின்னர் அவரை கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் அசாத் சாலி சாட்சியம் வழங்கியிருந்தார்.

இவை உண்மைக்கு புறம்பான கருத்துக்களாகும். எனது காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. இது சாதாரண விடயம் அல்ல. இத்தனை வீடுகள் தீ வைக்கப்பட்டது என்றால் அது நாடே அறிந்திருக்கும்.

என்னுடைய மூன்று வருட சேவை காலம் முடிவடைந்த பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்டதே அன்றி சஹரானை கைது செய்ய சென்ற போது அவ்வாறு நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அப்துல் ராசிக் தொடர்பில் ஏதேனும் தெரியுமா என சரத் பொன்சேகா கேட்ட பொழுதே முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமைதியாக இருந்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு