துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு போராடிய யானை..! காப்பாற்றிய பாலமோட்டை மக்கள்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு போராடிய யானை..! காப்பாற்றிய பாலமோட்டை மக்கள்..

பாலமோட்டை பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிருக்குப் போராடிய யானை கால்நடை வைத்தியா்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாாிகளினால் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. 

வவுனியா பாலமோட்டை குளத்துக்கு அருகே கடந்த ஜந்து தினங்களாக நடக்க முடியாமலிருந்த காட்டு யானையை அவதானித்த கிராம மக்கள் ஓமந்தைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகில் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மணித்தியாலயமாக மேற்கொண்ட 

மருத்துவச் சிகிச்சையின் பின்னர் யானை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு