பயணிகள் பேருந்தில் தீவகத்திற்கு கடத்தப்பட்ட பெருமளவு மதுபானம்..! சாரதி, நடத்துனா் கைது..

ஆசிரியர் - Editor I
பயணிகள் பேருந்தில் தீவகத்திற்கு கடத்தப்பட்ட பெருமளவு மதுபானம்..! சாரதி, நடத்துனா் கைது..

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்கு பயணிகள் பேருந்து மூலமாக கடத்தப்பட்ட சுமாா் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சாராயம் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இதுதொடர்பாக பேருந்து சாரதியும் , நடத்துனரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் .

வேலணையை சேர்ந்த பிரபல கால்நடை திருடரான விஜேந்திரன்  என்பவரே இவற்றை யாழ்நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள சின்னவன் என்பவருக்கு பேருந்து ஊடாக அனுப்பிவைத்ததாக நடத்துனர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இதன் அடிப்படையில் மேற்படி இருவரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஊர்காவற்துறை பொலிசார் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற இவ்வாறான சில பேருந்துகளில் தொடர்ச்சியாக 

சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பேருந்து நடத்துனர் வாக்குமூலம் அளித்துள்ளார் .


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு