ஹிஷ்புல்லாவுக்கு எதிரான ஆதாரங்களை சமா்பித்து 1 மணிநேரம் சாட்சியமளித்த நாரா.டி.அருண்காந்த்..

ஆசிரியர் - Editor I
ஹிஷ்புல்லாவுக்கு எதிரான ஆதாரங்களை சமா்பித்து 1 மணிநேரம் சாட்சியமளித்த நாரா.டி.அருண்காந்த்..

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவுக்கு எதிராக இந்து சம்மேளனத்தின் தலைவா் நாரா.டி.அருண்காந்த் 4ம் மாடியில் சாட்சியம் வழங்கியிருக்கின்றாா். 

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் 

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில் பல்­வேறு காணொளி ஆதா­ ரங்­களை வெளியிட்டார். பேட்­டியில் வெளியி­டப்­பட்ட ஆவ­ணங்கள் மற்றும் காணொ­ளிகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு 

குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணைப் பிரி­வினால் கோரப்­பட்­ட­தற்­கி­ணங்க, அருண்காந்த் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கினார். அதன்­படி காலை 9 மணி­யி­லி­ருந்து பிற்­பகல் 

ஒரு மணி­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து, காணொளி ஆதா­ரங்கள் அடங்­கிய கைய­டக்கத் தொலை­பேசி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காகப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களின்போது இத்­த­கைய செயற்­பா­டு­களில் ஏன் ஈடு­ப­டு­கின்­  றீர்கள்? உங்­க­ளு­டைய இலக்கு என்ன?" என்ற அதி­கா­ரி­களின் கேள்­ விக்கு, முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்­லாவு­டனோ 

அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரு­டனோ எமக்கு எது­வித தனிப்­பட்ட பிரச்­ சி­னை­களும் இல்லை. ஆனால் ஹிஸ்­புல்லா மத­வா­தத்தை அடிப்­ப­டை­ யாகக் கொண்டு தொடர்ச்­சி­யாக செயற்பட்டு வந்தமையாலேயே

நான் இவ்வாறு அவருக்கெதிராக ஆதாரங்களைப் பகிரங்கமாக வெளியிட்டேன்" என்று பதிலளித்ததாக அருண்காந்த் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு