கற்றாளை திருடிய இளைஞா்கள் கைது..! தீவகத்தில் தொடரும் கற்றாளை திருட்டு..

ஆசிரியர் - Editor I
கற்றாளை திருடிய இளைஞா்கள் கைது..! தீவகத்தில் தொடரும் கற்றாளை திருட்டு..

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞா்கள் இருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ்

தலமையிலான பொலிஸ் குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் ஊா்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு