யாழ்.உடுத்துறையில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம்..! காத்திருந்து மடக்கி பிடித்து நையப்புடைத்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுத்துறையில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம்..! காத்திருந்து மடக்கி பிடித்து நையப்புடைத்த மக்கள்..

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தொடா்ச்சியாக வளா்ப்பு ஆடுகளை திருடிவந்த திருடனை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து நையப்புடைத்துள்ளனா். 

இது தொடர்பாக ஆடுகளை களவு கொடுத்த பெண்மணி ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது நேற்று பிற்பகல் 2 30 மணி அளவில் மேய்ச்சலுக்காக சென்ற தமது ஆடுகளில் இரண்டு திரும்பி பட்டிக்கு வராத நிலையில் 

தமது ஆடுகளைத் தேடிச் சென்ற வேளை ஒருவன் தமது கடா ஆட்டில் ஒன்றை கொலை செய்து அதனை உரப்பையில் வைத்துக் கொண்டிருந்ததை அவதானித்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து இக்களவில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் ஒருவரை மட்டுமே தம்மால் பிடிக்க முடிந்ததாகவும் மிகுதி திருடர்கள் ஓடி தப்பியதாகவும் 

பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கருத்து தெரிவி்த்ததுடன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இதுவரை 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் இவர்களே 

செய்துள்ளதாகவும் தாம் சந்தேகிப்பதாகவும் இதுதொடர்பாகமருதங்கேணி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டு அகப்பட்ட திருடனையும் அவரால் கொல்லப்பட்ட ஆட்டையும் 

மருதங்கேணி போலீசாரிடம் தாம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு