ஐஸ் போதைப்பொருள், 7 இலட்சம் ரூபாவுடன் வாள்வெட்டுக் குழு உறுப்பினர் கைது!

ஆசிரியர் - Admin
ஐஸ் போதைப்பொருள், 7 இலட்சம் ரூபாவுடன் வாள்வெட்டுக் குழு உறுப்பினர் கைது!

ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், வாள்வெட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சக்தி என்ற இளைஞனே கைது செய்யப்பட்டவர் ஆவார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சக்தி என்ற நபரின் வீட்டை சோதனையிட்ட போதே, 4 கிராம் கஞ்சா மற்றும் 3 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் உட்பட 7 லட்சம் ரூபா காசு மற்றும் வங்கி பற்றுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞன் சக்தி என்ற பெயருடன் வாள்வெட்டுக் குழுவை நடத்தியதாகவும், இவர் பல வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு