பாசையூர் வெளிச்சவீடு அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

ஆசிரியர் - Admin
பாசையூர் வெளிச்சவீடு அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

பாசையூர் கடற்கரைப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்ற வெளிச்சவீட்டை யாழிற்கு விஜயம் செய்திருந்த குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வு செய்யும் விசேடகுழு ஒன்று அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டது. 

குறித்த குழுவினருடன் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட், யாழ் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர்கள், அரச அதிகதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 

குறித்த வெளிச்சவீட்டை அபிவிருத்தி செய்து தருமாறு நீண்டகாலமாக கடற்றொழிலாளர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கைவிடுத்து வந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய          அம்சமாகும்.

குறித்த விஜயத்தின் போது வெளிச்சவீட்டின் தற்போதை நிலை, அபிவிருத்தி நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு