நல்லைக் கந்தனுக்கும் சிறை - வெளி வீதியுலா நிறுத்தம்!

ஆசிரியர் - Admin
நல்லைக் கந்தனுக்கும் சிறை - வெளி வீதியுலா நிறுத்தம்!

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இன்று நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் சுவாமி வெளிவீதி வலம் வரும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. 

அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணத்துக்காக இந்த வெளி வீதிவலம் வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.     

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேக உற்சவத்தினைத் தொடர்ந்து ஆலய வசந்த மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி வெளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறும். இந்நிலையில், குறித்த வெளி வீதி வலம்வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு