யாழ்.பல்கலைகழக மாணவா்கள் நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..!

யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளா் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிசாலை உாிமையாளா் ஆகியோரை வழக்குகளில் இருந்து விடுவிக்ககோாி யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனா். 

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளா் ஆகியோரும், 

மருத்துவ பீடத்தின் சிற்றுண்டிசாலை உாிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனா். பின்னா் அவா்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அவா்களுக்கு எதிரான வழக்குகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் மாணவா்களையும் சிற்றுண்டிசாலை உாிமையாளரையும் விடுதலை செய்யக்கோாி யாழ்.பல்கலைகழக மாணவா்கள் நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை நடாத்தவுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு