யாழ்.சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பெயரால் எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பெயரால் எச்சரிக்கை..!

யாழ்.நகரை அண்டியுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான சுண்டுக்குழி மகளீர் கல்லூரிக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு