பாடசாலை ஆசிாியா்கள், மாணவா்களுக்கு விசேட அடையாள அட்டை..!

ஆசிரியர் - Editor I
பாடசாலை ஆசிாியா்கள், மாணவா்களுக்கு விசேட அடையாள அட்டை..!

எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகளினதும், மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி பிரதேச வலையக்கல்வி அலுவலகங்கள் மூலம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த நபர்கள் பாடசாலையில் ஆசிரியராக மற்றும் கல்விசாரா ஊழியர்களாக பணியாற்றுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தொழில்சார் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கையில் வலயக்கல்வி அலுவலகங்கள் ஈடுபட்டுள்ளதுடன் பாடசாலை அதிபர்கள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் இருந்து எக்காரணத்தை கொண்டும் வெளியே போக அனுமதிக்க கூடாது என அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு