வாள்களை காட்டி வா்த்தக நிலையங்களில் கொள்ளையிட்ட கவாலி கைது..! மேலும் இரு காவாலிகள் தேடப்படுகின்றனா்.

ஆசிரியர் - Editor I
வாள்களை காட்டி வா்த்தக நிலையங்களில் கொள்ளையிட்ட கவாலி கைது..! மேலும் இரு காவாலிகள் தேடப்படுகின்றனா்.

யாழ்.நகா்பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வா்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்றவா்களையும் வெட்டி காயப்படுத்திய ரவுடி கும்பலை சோ்ந்த ஒருவா் யாழ்.பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவா் தேடப்படுகின்றனா். 

கைது செய்யப்பட்டவர் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகரில் மணத்தறை லேன், நாவலர் வீதி உள்பட பல இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு வேளையில் 

மூவர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியது. வீதியில் சென்றவர்களை வாளால் மிரட்டியும் வெட்டியும் அடாவடியில் ஈடுபட்ட கும்பல், கடைகளுக்குச் சென்று வாளைக் காண்பித்து கொள்ளையிலும் ஈடுபட்டது. சம்பவங்கள் தொடர்பில் சிசிரிவி கமராக்களின் பதிவுகளை வைத்து 

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் மறுநாள் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகதபரிடமிருந்து கைப்பற்றப்பது என்று தெரிவித்த பொலிஸார், 

மேலும் இருவர் தேடப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு