கத்தோலிக்க பாடசாலைகளை 6ம் திகதி ஆரம்பிக்கவேண்டாம், தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துங்கள். பேராயா் மல்கம் ரஞ்சித் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
கத்தோலிக்க பாடசாலைகளை 6ம் திகதி ஆரம்பிக்கவேண்டாம், தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துங்கள். பேராயா் மல்கம் ரஞ்சித் கோாிக்கை..

உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் இலங்கையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், தேவாலயங்களில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எதிா்வரும் 6ம் திகதி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படவிருந்த நிலையில், கிறிஸ்த்தவ பாடசாலைகளை 6ம் திகதி திறக்கவேண்டாம் எனவும், 

பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிறிஸ்த்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடாத்தவேண்டாம் எனவும் கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோாிக்கை விடுத்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு