ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் களஞ்சியம் முற்றுகை, ஆபத்தான மாத்திரைகள் மீட்பு..! அதிா்ச்சியில் கொழும்பு.

ஆசிரியர் - Editor I
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் களஞ்சியம் முற்றுகை, ஆபத்தான மாத்திரைகள் மீட்பு..! அதிா்ச்சியில் கொழும்பு.

ஐ.எஸ் பயங்கரவாத குழுவினால் பயன்படுத்தப்பட்ட களஞ்சிய சாலை விசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், மிக ஆபத்தான கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள் மற்றும் பாலியல் உணா்வை துாண்டும் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்து இந்த மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5 கருகலைப்பு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொழும்பில் மீட்கப்பட்ட இந்த மாத்திரைகள் சுமார் 40 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை குடிக்கும் பெண்களுக்கு வாழ் நாள் முழுவதும் குழந்தை பெற முடியாத நிலை ஏற்படும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு