மஹிந்த அரசாங்கத்தினால் ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய பயங்கரவாதம்..! 1 மாதத்திற்குள் அம்பலப்படுத்துவோம்.

ஆசிரியர் - Editor I
மஹிந்த அரசாங்கத்தினால் ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய பயங்கரவாதம்..! 1 மாதத்திற்குள் அம்பலப்படுத்துவோம்.

தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள முக்கிமானவா்களை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் சுகாதார அமைப்பா் ராஜிதசேனாரத்ன கூறியுள்ளாா். 

அல­ரி­மா­ளி­கையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

 அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்புக்கள் 2015ஆம் ஆண்­டுக்கு பிறகே வளர்ச்­சி­ய­டைந்­த­தாக குறிப்­பிடும் எதிர்­த­ரப்­பினர் 

கடந்த காலத்தில் இடம் பெற்ற செயற்­பா­டு­க­ளையும் மீட்­டிப்­பார்க்க வேண்டும். சர்­வ­தேச அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­டைய இவ்­வா­றான அமைப்­புக்கள் குறு­கிய காலத்­திற்குள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை.

தற்­போது நாட்டில் நடை­மு­றையில் உள்ள அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்தும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்­திலே உரு­வாக்­கப்­பட்­டன. 

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் ஷரி-யா சட்­ட­மூ­லத்­திற்கு அமைய செயற்­பட ஆரம்­பித்­தன.

 2013ஆம் ஆண்டு மே. மாதம் 13ம் திகதி ஷரி-யா சட்­ட­மூ­லத்­திற்­கான வர்த்­த­மானி வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் உள்­ளிட்ட முஸ்லிம் நாடு­களில் நடை­மு­றையில் உள்ள 

 சட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஷரி- யா சட்­ட­மூலம் காணப்­பட்­டது. இச்­சட்டம் அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை கொண்­டி­ருந்­த­மை­யினை ஏன் அப்­போது பொறுப்பில் இருந்­த­வர்கள் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. 

 இச்­சட்­டத்தின் ஊடா­கவே அரபுக் கல்­லூ­ரி­களும், தனி முஸ்லிம் கற்கை நிலை­யங்­களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இச்­சட்ட மூலத்தின் அடிப்­ப­டை­யிலே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் செயற்­பட்­டன. கடந்த அரசாங்­கத்தில் மாத்­திரம் இச்­சட்­டத்தை ஆதா­ர­மாகக் கொண்டு 

 200 பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினை குறிப்­பி­டு­வது அவ­சியம். 2015ஆம் ஆண்­டுக்கு பிறகு எவ்­வித அமைப்­புக்­களும், 

பள்­ளி­வா­சல்­களும் ஷரி- யா சட்­டத்தின் ஊடாக அமைக்­கப்­ப­ட­வில்லை.அரச புல­னாய்வு பிரி­வி­னரை தேசிய அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பி­டு­வது ஏற்றுக் கொள்ள முடி­யாது. 

 சட்­டத்­திற்கு முர­ணாக செயற்­பட்டு பத­வியை துஸ்­பி­ர­யோகம் செய்­த­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். தேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்­டுக்கு பிறகு சம்­பளம் அவ­சியம் 

இல்­லா­மலே வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பொறுப்பு கூற வேண்டும். 

 இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளாக செயற்­பட்­டுள்ள தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் எதிர்க்­கட்­சியின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, 

 உதய கம்­மன்­பில, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்பு கொண்­டுள்­ள­மையை புகைப்­பட ஆதா­ரங்­களின் ஊடாக அறிய முடி­கின்­றது. 

இவர்கள் அனை­வரும் சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள் என்­பது அனை­வரும் அறிந்த விடயம்.கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் தூர­நோக்­க­மற்­றவை. 

இவர்கள் பொறுப்­பற்ற விதத்தில் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களின் விளை­வி­னையே தற்­போது எதிர்க்­கொள்ள நேரிட்­டுள்­ளது. 

தற்போது ஒன்றும் அறியாதவர்கள் போல் கருத்துக்களை வெளியிடுவதால் எவ்வித உண்மைகளையும் மறைக்க முடியாது. அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக 

அரசாங்கம் செயற்படும் போது அவர்கள் ஷரி-யா சட்டத்தை தமது கேடயமாக பாதுகாத்தனர். 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை 

 இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு