100 நாட்கள் நிறைவில் 22 குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றிய வடக்கு ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
100 நாட்கள் நிறைவில் 22 குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றிய வடக்கு ஆளுநா்..

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பதவியேற்று 100வது நாளை கொண்டாடும் வகையில் வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் காணி அற்ற 22 குடம்பங்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு இன்று காலை வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம், 

யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் ஆகியோா் கலந்து கொண்டு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கிவைத்தனா். 

இதனை தொடா்ந்து யாழ்.பண்ணை கடற்கரையில் மரக்கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டமும் மேற்கொள்ளப்பட்டது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு