ஐபிஎல் கிரிக்கெட் - ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டத்தால் மும்பைக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

ஆசிரியர் - Admin
ஐபிஎல் கிரிக்கெட் - ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டத்தால் மும்பைக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்.

பிரித்வி ஷா 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் இறங்கினார். அவர் 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறங்கிய, காலின் ஐங்கிராம் தவானுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் ஒன்று, இரண்டாக சேர்த்தனர். கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரியும் விளாசினர்.

இதனால் டெல்லி அணியின் ரன்வேகம் அதிகரித்தது. அணியின் எண்ணிக்கை 112 ஆக இருக்கும்போது, ஐங்கிராம் அவுட்டானார். அவர் 32 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ரிஷப் பந்த் இறங்கினார்.

நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 36 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரிஷப் பந்த் அதிரடியில் இறங்கினார். அவர் சிக்சர், பவுண்டரியாக விளாசினார். அவர் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 27 பந்துகளில் 7 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்களுடனும், ராகுல் டிவேடா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.  

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மிட்செல் மெக்லகன் 3 விக்கெட்டும், பாண்ட்யா, பென் கட்டிங், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு