முள்ளிவாய்க்காலில் ஆட்லறி ஷெல்லின் வெற்று கோதை தனிமையில் இருந்து ஆராய்ந்து கொண்டிருந்த 6 வயது சிறுவன்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் ஆட்லறி ஷெல்லின் வெற்று கோதை தனிமையில் இருந்து ஆராய்ந்து கொண்டிருந்த 6 வயது சிறுவன்..

முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாா் ஒருவருடைய காணியில் மீட்கப்பட்ட ஆட்லறி ஷெல்லின் வெற்றுக் கோதினை 6 வயது சிறுவன் ஒருவன் துாக்கிவைத்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது பொியவா்கள் கண்டு அதனை பறித்துள்ளனராம். 

இந்த சம்பவத்தின் பின்னணியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் போா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இன்றளவும் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பூரணமாக வெடி பொருட்கள் அற்ற பகுதியாக முள்ளிவாய்க்கால் மாறவில்லை. 

இந்நிலையில் ஆட்லறி ஷெல்லின் வெற்று கோது ஆபத்தில்லாதபோதும், இவ்வாறு சிறுவா்கள் அதனை கையாள்வது வெடிக்காத ஆபத்தான வெடி பொருட்களையும் கையாளும் நிலைக்கு தள்ளும். எனவே பொறுப்பு வாய்ந்தவா்கள் இது தொடா்பாக கவனம் எடுக்கவேண்டும். 

இவ்வாறு முள்ளிவாய்க்கால் பகுதியை சோ்ந்த ஊடகவியலாளா் ஒருவா் கூறியுள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு