இன்று உயா்மட்ட கலந்துரையாடல், இப்போதாவது பேசுமா கூட்டமைப்பு..?

ஆசிரியர் - Editor I
இன்று உயா்மட்ட கலந்துரையாடல், இப்போதாவது பேசுமா கூட்டமைப்பு..?

யாழ்.வலிகாமம் வடக்கில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு காணி சுவீகாிப்பதற்கு எ டுக்கப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அது தொடா்பில் இறுதி தீா் மானத்தை எடுப்பதற்காக இன்று காலை கொழும்பில் அவசர கூட்டம் இடம்பெறவிரு க்கின்றது. 

காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கையை நிரந்­த­ர­மா­கக் கைவி­டு­வதா, அல்­லது மாற்று வழி­ களை முன்­னெ­டுப்­பதா என்­பது தொடர்­பில் காணி அமைச்­சில் இடம்பெறும் அவ­சரக் கலந்­து­ரை­யா­ட­லில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வலி. வடக்­கில் ஜே/226, ஜே/233, ஜே/234 கிராம அலு­வ­லர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய 232 ஏக்­கர் 

காணி­களை கடற்­ப­டை­யின் முகாம் அமைப்­ப­தற்­கும், சுற்­றுலா அதி­கார சபைக்­கும் சுவீ­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. மகிந்த அர­சின் காலத்­தில், நகுலேஸ்­வ­ரத்­தில் ஆடம்­பர விடுதி அமைக்­கப்­பட்­டது. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் அந்த விடு­தியை வழங்­கு­மாறு வடக்கு மாகா­ண­சபை கோரி­யி­ருந்­தது. 

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­க­மும் கோரி­யி­ருந்­தது. இறு­தி­யில் சுற்­றுலா அதி­கார சபைக்கு வழங்க ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­தி­ருந்­தார். சுற்­றுலா அதி­கார சபைக்கு அந்த மாளிகை அத­னோடு இணைந்த 62 ஏக்­கர் நிலப் பரப்பை சுவீ­ க­ரிப்­ப­தற்கு அரச தலை­வர் நட­வ­டிக்கை எடுக்­கப் பணித்­தி­ருந்­தார்.

இத­னை­ய­டுத்து கடற்­ப­டை­யி­னர் தமது முகாமை அந்­தப் பகு­தி­யில் அமைப்­ப­தற்கு 160 ஏக்­கர்­க­ளைச் சுவீ­க­ரிக்­கக் கோரி­யுள்­ள­னர். கோயில், மடம், சிமெந்­துக் கூட்­டுத்­தா­ப­ னம் மற்­றும் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான 232 காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­காக இன்று அள­வீடு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பில் இத­னை­ய­டுத்து காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்கை தற்­கா­லி­க­மாக இடை­ நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு