த.தே.கூட்டமைப்பின் மீது அபாண்டமான பொய் கூறுவோர் வைத்திருக்கும் தீர்வு திட்டம் என்ன? நா.உ சுமந்திரன்

ஆசிரியர் - Editor I
த.தே.கூட்டமைப்பின் மீது அபாண்டமான பொய் கூறுவோர் வைத்திருக்கும் தீர்வு திட்டம் என்ன? நா.உ சுமந்திரன்

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் வேறு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் தமிழர்களின் நீண்டகால அபிலா ஷைகளை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன வழி என்பதை சொல்லவேண்டும். தமிழ் மக்கள் மீண்டும் ஆ யுத ங்களை ஏந்தவேண்டுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பிருக்கிறார்.

பருத்துறை பகுதியில் நேற்று உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவ ர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போ

ம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்கபோகிறீர்கள்? என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதி ல் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். குறிப்பாக ஏக்கிய இராச்சிய என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். அது எதற்கான இணக்கம் என் றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பது. நான்

சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் பூர ணமானதும், மீள பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள் என கேட்கிறேன். இத னாலேயே நாங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு இணங்கினோம். அதிகார பகிர்வு தவிர்ந்த மற்றய வி டயங்களில் நாங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். ஆனால் அதிகார பகிர்வு விடயத்தில்

நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்போம். காரணம் தமிழ் மக்களுடைய அ ரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. அர சாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களுக்கும் பூரணமான திருப்தியில்i ல். ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேவே இந்தளவு

விடயங்களை சாதிக்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது. இந்த விடயத்தில் ஊட கங்களும் பொய்யை சொல்கின்றன. அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மா றியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள். அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கூறும் 

உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு