நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் இரு பாடசாலை கட்டிடங்கள்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் இரு பாடசாலை கட்டிடங்கள்..

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாவகச்சேரி இந்துகல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர னின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் மற்றும் சிற்றுண்டிச் சாலை ஆகியன இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. 

முதலில்  சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந் திரனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.  பாடசாலை அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் க.நடராசா ஆகியோர் கலந்து கொண்டு தரிப்பிடத்தினை திறந்து வைத்தனர். இதன்போது கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் பனை அபிவிருத்திச்சபைத் தலைவருமான க.நடராசா எழுதிய நூல் ஒன்றின் 

அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.  இதன்பின்னர் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையும் திறந்து வைக்கப்பட்டது.  கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற 

உறுப்பினரோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும் விருந்தினராக கலந்துகொண்டு சிற்றுண்டிச்சாலையை திறந்து வைத்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு