பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்புகிறது கூட்டமைப்பு!

ஆசிரியர் - Admin
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்புகிறது கூட்டமைப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிறப்புக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தக் கடிதத்தை வரையும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என்றும், அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினரும், புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை, இலங்கை மீது சர்வதேச சமூ­கத்­தின் மேற்­பார்வை அவ­சி­யம். போர்க்­குற்­றங்­கள் குறித்து விசா­ரணை அவ­சி­யம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிட்ட வேண்­டும். கால அவ­கா­சத்தை வழங்­காது ஐ.நா. தீர்­மா­னத்தை குப்­பைத்­தொட்­டி­யில் போட்­டு­விட முடி­யாது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்துள்ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்­றுப் பகல் 11 மணிக்கு இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு