காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 15 ஏக்கர் காணிகளை கைமாற்ற அமைச்சரவை அனுமதி!

காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 15 ஏக்கர் காணியை கைமாற்றிக் கொடுப்பதற்காக வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட சுமார் 15 ஏக்கர் காணியை கைமாற்றிக் கொடுப்பது சிறந்தது என அடையாளங் காணப்பட்டுள்ளது.