காபன் பாிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு வந்துசோ்ந்தது, என்ன முடிவு வந்திருக்கிறது மக்கள் ஆவல்..

ஆசிரியர் - Editor I
காபன் பாிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு வந்துசோ்ந்தது, என்ன முடிவு வந்திருக்கிறது மக்கள் ஆவல்..

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் காபன் பாி சோதனை அறிக்கை இன்று சட்டபூா்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக, அகழ்வு பணி களுக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாாி சமிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாா். 

இன்றைய தினம் (06.03.2019) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமேரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறாத  நிலையில் இன்றைய தினம் குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு கிடக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 அதே நேரத்தில் குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ்வறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்த மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்சியாக மேற்கொள்வதா?இல்லையா? என்பது தொடர்பாக நீதவான் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார் .

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு