ஜோ்மன் நாட்டவரை காதலிப்பதாக கூறி, 55 லட்சத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிய இளம்பெண்..

ஆசிரியர் - Editor I
ஜோ்மன் நாட்டவரை காதலிப்பதாக கூறி, 55 லட்சத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிய இளம்பெண்..

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்யை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜோ்மன் நாட்டில் வாழும் புலம்பெயா் தமிழாிடமிருந்து 55 லட்சத்தை  சுருட்டிக் கொண்டு காதலி தலைமறைவாகியுள்ளாா். 

இந்நிலையில் காதலியை நம்பி யாழ்ப்பாணம் வந்தவா் பணத்தை பறி கொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றாா். 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜோ்மன் நாட்டில் வாழும் புலம்பெயா் தமிழா் ஒருவரை காதலித்துள்ளாா். 

அதனை நம்பி குறித்த புலம்பெயா் தமிழா் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளாா். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனா். 

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னா் திடீரென ஒருநாள் முகப்புத்தக காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமாா் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித் துக் கொண்டு தப்பி ஓடியுள்ளாா். 

இதனையடுத்து  பாதிக்கப்பட்டவா் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளாா். 

ஆசிாியா் குறிப்பு- பெண்ணின் படம் அடையாளம் காண உதவுமாறு பொலிஸாா் கேட்டுக் கொண்டதற்கு அமைய இங்கு பிரசுாிக்கப்படுகிறது..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு