காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு மரண சான்றிதழ்களை கொடுங்கள், மறைந்திருந்த இனவாத பேய் வெளிவருகிறது..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு மரண சான்றிதழ்களை கொடுங்கள், மறைந்திருந்த இனவாத பேய் வெளிவருகிறது..

காணாமல் ஆக்கப்பட்டவா்களை கண்டறிவதற்கு ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு ஆகியவற்றின் தகவல்கள் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குங்கள் என அமைச்சா் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளாா். 

சுஹூருபாயவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இராணுவத்தினர் அனர்த்த நிலைமைகளின் போதே முகாம்களில் இரு ந்து வெளியே வந்து செயற்படுகின்றனர். வேறு தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாத நிலை தற்போது காணப்படுகிறது. 

இந்த நிலையில் புவியியல் ரீதியாக முகாம்களை அமைந்ததன் பின்னர் எஞ்சிய பகுதி காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது வலியுறுத்தல் விடுத்தார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு