பருத்தித்துறைக் கடற்பரப்பில் 86 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பரப்பில், 85 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர், இன்று காலை காங்கேசன்துறைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு ஒன்றில் இரண்டு பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.