மீசாலையில் விபத்து, 3 போ் படுகாயம் இரு மோட்டாா் சைக்கிள்கள் சேதம்..
யாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக் குள்ளாதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா்.
இந்த விபத்து ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இன்று நடைபெற்றது.
சாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வாகையடி யில் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
மூவர் கை கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேல திக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மந்துவில் மேற்கு கொடிகாமம், மீசாலை தெற்கை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விபத்துக் குள்ளாகினர்.