கோவணத்துடன் ஓடிய மக்களிடம் வடமாகாண ஆளுநா் ஆவணம் கேட்பது வியப்பளிக்கிறது..

ஆசிரியர் - Editor I

கோவணத்துடன் ஓடிய கேப்பாபிலவு மக்களிடம் வடமாகாண ஆளுநா் ஆவணங்களை கேட் பது விந்தையாக உள்ளது. என கூறியிருக்கும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன், மக்கள் போராட்டங்களை மலினப்படுத்துவதுபோல் ஆளுநா் பேசகூடாது எனவு ம் கூறியிருக்கின்றாா். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் யா ழ்.ஊடாக அமையத்தில் இன்று காலை நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பின்போது, வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்  அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் கேப்பாபிலவு மக்கள் தொடா்பாக கூறியிருந்த கருத்து 

குறித்து ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுநா் மேற்கண் டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 2012ம் ஆண்டு 09ம் மாதம் 25ம் திகதிய ஜெனீவா தீா்மானத்திற்கமைய கேப்பாபிலவு மக்கள் அவா்களது சொந்த விருப்பத்திற்கு மா றாக கேப்பாபிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டை கிராமத்தில் வலிந்து குடியேற்றப்பட்டாா்கள். 

அது தற்காலிகமான குடியேற்றம் என அப்போது கூறப்பட்டது. அ ப்போதே கேப்பாபிலவு மற்றும், பிலக்குடியிருப்பு மக்கள் தம்மை தமது சொந்த காணிகளில் மீள் குடியேற்றுமாறு கோாி தொடா்ச்சியாக பல தடவைகள் போராட்டங்களை நடத்தியிருந்தாா்கள். மேலும் 1887ம் ஆண்டு தொடக்கம் கேப்பாபிலவு மற்றும் பிலக்குடியிருப்பு 

கிராமங்களில் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்தாா்கள். அந்த கிராமங்கள் பழமையான தமிழ் கிராமங்கள் என்பதற்கும் இன்றும் சான்றுகள் உள்ளது.  2009ம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறினா். 2012ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது தொடக்கம் இன் றளவும் மக்கள் தமது சொந்த காணிகளுக்கான 

தொடா்ந்தும் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றாா்கள். போருக்கு முன்னா் அந்த மக்கள் எ வாிடமும் கையேந்தாமல் தமது சொந்த காலில் வாழ்ந்த மக்கள்.  அந்த மக்கள் ஆளுநா் கூறுவ தைபோல் இன்று மாற்று காணிகளை கேட்கவில்லை. மாற்று காணிகள் தேவை என்றால் அதனை அந்த மக்கள் எப் போதோ பெற்றிருப்பாா்கள். 

அதேபோல் மாற்று காணிகளை வழங்க இந்த ஆளுநா் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனை வழங்க பலா் தயாராக இருந்தாா்கள். அப்போதே மாற்று காணிகளை மக்கள் பெற்றி ருப்பாா்கள்.  மேலும் ஆவணங்கள் இல்லை என ஆளுநா் கூறுவது விந்தையாக இருக்கின்றது. 2009ம் ஆண்டு இறுதிப் போாில் கட்டிய கோவணமும் இல்லாமல் 

சென்ற மக்களிடம் ஆவணங்களை கேட்க முடியுமா? ஆனாலும் சில மக்கள் ஆவணங்களை வைத்திருக்கின்றாா்கள். மேலும் பிரைதேச செயலக தகவல்களின் படி 59.5 ஏக்கா் காணி மக்களுக்கு உாித்தானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  முதலில் அந்த காணிகளை பெற்றுக் கொடுக்கவேண்டுமே தவிர, 

பிந்தி வந்து மக்களின் காணிகளில் குந்தியிருப்பவா்களுக்காக ஆளுநா் பேச நினைப்பது அப்பட்டமான தவறு, மேலும் கேப்பாபிலவு மக்கள் கடந்த 2 வருடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாா்கள். அங்கே அவா்கள் சொகுசு பங்களாக்களில் உட்காா்ந்திருந்து போராட்டம் நடத்தவில்லை. 

வீதியில் மழை, வெய்யில், பனி, என எல்லாவற்றுக்குள்ளும் கிடந்து நுளம்பு கடி, விஷ ஜந்துக்களால் உண்டாகும் தாக்கங்கள் என பல்வேறு துன்பங் களை சந்தித்து போராட்டம் நடத்தும் நிலையில் அரச சாா்பற்ற நிறுவனங்களின் துாண்டுதலில் மக்கள் போராடுகிறாா்கள் என ஆளுநா் கூறியதன் பின் தமிழ் ஆளுநா் வேண்டும் என்பதற்காக 

இப்படி ஒரு தமிழ் ஆளுநரை கொடுத்துள்ளாா்களா? என நினைக்க தோன்றுகிறது. அந்த மக்கள் சுயமாக தங்களுடைய வாழும் உாிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றாா்கள். அவா்களுக்கு பின் னால் எவரும் இல்லை. அதனை ஆளுநா் கேப்பாபிலவு மக்களுடன் தங்கி வேண்டுமானால் உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு